![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_teIA9P7KqOkM8Xh7vE3zrAvFibhApwkPh7GiXiIiWZzMfPoNOLIrGbl8Pde7T_N3VkszldEHwI7sn--s7Qv4cNo9hN8IH2jB6UE7MwoAdQowV2pDMk48x1YyPwcrw1kfTCKxi3UfvCDR5ilolK032UV8jAHOGlTrVqQPZT6M2slNCPCgprhEFV3sxJuPgTMQihmRNCF8Ac-Q5uro1xp8D38NgR1lqrX97poyiSFg=s0-d)
சாவைப்
பற்றி எனக்குக் கவலை இல்லை.
என்
பின்னால் வரும் தோழர்கள் என்
துப்பாக்கியை எடுத்துக்கொள்வார்கள்.
தோட்டாக்கள்
தொடர்ந்து சீறும்.
பலப்பல
கேள்விகள் அவரது வானத்தில்
வல்லூறுகளாய்ப் பறந்தன.
இந்தக்
குழப்பமான சூழ்நிலையில்தான்
'சே'
& காஸ்ட்ரோ
சந்திப்பு!
ஒரு
மகத்தான வீரனை தனக்குள்
இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து
கியூபா அரசியலில் எவருக்கும்
அறியாத பரிணாம மாற்றங்கள்
நிகழத்துவங்கின.
வரைபடங்கள்
விரிக்கப்பட்டன.
புரட்சிக்கான
திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.
பயிற்சி
முழுவதுமாக முடிவடைந்த
வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக
மாறியிருந்தனர்.
புரட்சிக்கான
நாள் குறிக்கப்பட்டது.
இம்முறை
காஸ்ட்ரோவின் கண்களில்
நம்பிக்கை ஒளி தெரிந்தது.
தனது
கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு
மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது
எனும் நம்பிக்கை.
அப்போது
'சே'வுக்கு
வயது 27.
காஸ்ட்ரோவுக்கு
32.
காஸ்ட்ரோவுக்காவது
கியூபா தன் சொந்த நாடு.
போராடிய
வேண்டிய அவசியம் இயல்பானது.
ஆனால்
'சே'வுக்கு
அப்படி அல்ல.
தனக்கு
முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு
தேசத்தில்,
அம்மக்களின்
விடுதலைக்காகத் தன் உயிரைப்
பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது,
உலக
வரலாற்றில் எப்போதும் எங்கும்
நிகழ்ந் திராத ஒன்று.
இதனால்தான்
'சே'
மனிதருள்
மாமனிதராக அடையாளம்
காணப்பட்டார்.
'கால்கள்தான்
என் உலகம்'
என
'சே'
ஒருமுறை
தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம்
கூறியிருந்தார்.
'என்
கால்கள் பதியக்கூடிய பெருவெளி
அனைத்தும் எனது!
அதில்
வாழும் அனைவரும் என் சகோதரர்கள்'
எனும்
பேருண்மையை அர்த்தப்படுத்தும்
வாசகம் இது.
இதனால்தான்
காஸ்ட்ரோவிடம்,
'கியூபாவுக்கு
விடுதலை கிடைக்கும் வரைதான்
நான் உங்களுடன் இருப்பேன்.
அதன்பின்
நான் என் பயணத்தைத் தொடர்ந்து,
வெவ்
வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்'
என
அழுத்தமாகக் கூறியிருந்தார்
'சே'.
காஸ்ட்
ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஏறக்குறைய
ஒன்றரை வருட கடுமையான ஆயுதப்
பயிற்சிக்குப் பிறகு 1956,
நவம்பர்
26&ம்
தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில்,
82 போராளிகள்
ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின்,
விடுதலையின்
பாடலை முழங்கியபடி,
கிரான்மா
எனும் படகு கியூபாவை நோக்கிப்
பயணித்தது.
1957,
ஜனவரி
17&ம்
தேதி,
தளபதி
லா பிளாட்டோ கொல்லப்பட்டதன்
மூலம் புரட்சியாளர்களின்
முதல் வெற்றிச் சங்கொலி
கியூபாவில் எதிரொலித்தது.
அன்று
துவங்கி மூன்றாண்டுகள்
தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா
யுத்தம்.
துவக்கத்தில்
குழுவில் மருத்து வராகவும்
லெஃப்டினென்ட்டாகவும்
இடம்பெற்ற 'சே',
தன்
திறமை,
துணிச்சல்,
மதிநுட்பம்
ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு
அடுத்த நிலையிலிருந்து படைகளை
வழி நடத்தினார்.
அவரது
திறமை கண்டு வியந்த சக கியூபா
வீரர் கள் அவரை பிரியத்துடன்
'சே'
என
அழைத்தனர்.
கடுமை
யான ஆஸ்துமா துன்புறுத்
தியபோதிலும்,
அடர்வனங்
களிலும் மலைகளிலும் சளைக்காமல்
வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி
படையை வழி நடத்தினார்
'சே'.
''சாவைப்
பற்றி எனக்குக் கவலை இல்லை.
என்
பின்னால் வரும் தோழர்கள் என்
துப்பாக்கியை எடுத்துக்
கொள்வார்கள்.
தோட்டாக்கள்
தொடர்ந்து சீறும்''
போன்ற
அவரது வாசகங்கள்,
களத்தில்
வீரர்களுக்கு மில்லியன் மெகா
வாட் மின்சாரத்தைப் பாய்ச்சி
சீற்றம் கொள்ளவைத்தன.
யுவேராவில்
நடைபெற்ற யுத்தத்தில்,
53 ராணுவத்தினரை
வெறும் 18
கெரில்
லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான்
'சே'வின்
வீரத்தை கியூபாவுக்கு
வெளிச்சமிட்டது.
பின்
தொடர்ந்த ஆண்டுகளில் வெவ்வேறு
நிலைகளில் புரட்சிப்படை,
பாடிஸ்டா
அரசை முழுவதுமாக விரட்டியடித்தது.
1958
ஆகஸ்ட்
மாதத்தில்,
புரட்சிப்
படை தலைநகர் ஹவானாவுக்குள்
ஊடுருவியது.
கியூபா
முழுவதும் காஸ்ட்ரோவின்
வசமானது.
வரலாற்
றுச் சிறப்புமிக்க இந்தக்
கெரில்லா யுத்த வெற்றி,
உலகின்
அனைத்து நாடு களையும் வியப்பில்
ஆழ்த் தியது.
'டைம்'
இதழ்
'சே'
அட்டைப்படத்துடன்
'புரட்சி
யின் மூளை'யென
கட்டுரை எழுதியது.
1959,
பிப்ரவரி
16&ல்
கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ
பதவியேற்றவுடன்,
விவசாயத்
துறையில் தேசியத் தலைவராக
நியமிக்கப்பட்டார் 'சே'.
தேசிய
வங்கியின் தலைவராக கியூபா
ரூபாய் நோட்டுகளில் 'சே'
என
கையெ ழுத்திடும் அளவுக்கு
முக்கியத்துவம் பெற்றார்.
பின்
தொழிற்துறை அமைச் சராகவும்
'சே'
பதவி
வகித்தார்.
இருந்தாலும்
'சே'
தன்னை
ஒரு சாதாரணக் குடிமகனாகவே
அடையாளம் காட்டிக் கொண்டார்.
விவசாயக்
கூலிகளுடன் சேர்ந்து கரும்பு
வெட்டுவதும்,
தொழிற்
சாலைகளில் இதர பணியாளர்களுடன்
சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே
வாழ்ந்தார்.
'சே'
மற்றும்
காஸ்ட்ரோ இருவருக்குமிடையே
யுத்தத்துக்கு முன்பும்
பின்புமான உறவுகளில் வேறுபாடுகள்
இருந்தது என்றாலும்,
ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்ததில்லை.
அமெரிக்க
ஏகாதிபத்தியத்தை மூன்றாம்
உலக நாடுகளின் பிரதிநிதி
யாக,
ஒற்றை
மனிதனாகத் தன்னால் வேரறுக்க
முடியும் என 'சே'
திடமாக
நம்பினார்.
கியூபாவுக்கு
ஏவுகணைகள் இறக்குமதி செய்ய
ரஷ்யா வாக்குறுதி தந்தபோது,
''ரஷ்ய
ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால்
அது முதலில் அமெரிக்க நகரங்களையே
குறிவைக்கும்''
எனத்
தைரியமாகக் குரல் கொடுத்தார்.
அமெரிக்கா,
கியூபாவின்
மீது விதித்த பொருளாதாரத்
தடைதான் அவரது இந்தக் கட்டற்ற
கோபத்துக்குக் காரணம்.
அமெரிக்காவின்
சி.பி.என்.
தொலைக்காட்சி,
ஒரு
நேர்காணலுக்காக சேகுவேராவை
நியூயார்க்குக்கு அழைத் தது.
''அமெரிக்கா
ஒரு கழுதைப் புலி.
அதன்
ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்
பேன்''
என
அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப்
பேட்டி தந்தார் 'சே'.
சே
குவேராவுக்கு முடிவுரை எழுதக்
களத்தில் இறங்கியது அமெரிக்க
உளவு நிறுவனமான
சி.ஐ.ஏ!
சி.ஐ.ஏ...
உலகின்
ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு
மனிதன் சுடப்பட்டு கீழே
விழுவான்.
அவனை
யார்,
எங்கிருந்து,
எதற்காகச்
சுட்டார்கள் என எதுவும்
தெரியாது.
ஆனால்,
அவனைச்
சுட்ட துப்பாக்கியின் மிச்ச
புகை,
அமெரிக்காவில்
கசியும்.
உலக
வரைபடத்தில் இந்த ஓநாயின்
காலடி படாத இடமே இல்லை.
'சே'வின்
அமெரிக்கப் பயணமும்,
அமெரிக்க
எதிர்ப்புப் பேச்சும்
சி.ஐ.ஏ&வுக்கு
சினமூட்டின.
அதுவரை
காஸ்ட்ரோவை குறிவைத்து இயங்கிய
சி.ஐ.ஏ.
தன்
முழு எரிச்சலையும் 'சே'வின்
பக்கம் திருப்பியது.
காஸ்ட்ரோவைக்
காட்டிலும் 'சே'தான்
மிகவும் ஆபத்தானவர் என இலக்கு
தீர்மானிக்கப்பட்டது.
விழும்
இடமெல்லாம் விதைபோல விழுவதும்,
எழும்
இடமெல்லாம் மலை போல எழுவதுமாக
இருந்த 'சே',
சதித்
திட்டம் குறித்து அறிந்தும்
புன்னகைத்தார்.
தொடர்ந்து
சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமாக
தன் பயணங்களைத் தொடங்கினார்.
சென்ற
இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக்
கடுமையாகத் தாக்கிப்
பேசினார்.
ரஷ்யாவையும்
ஒரு பிடி பிடித்தார்.
அமெரிக்காவால்
பாதிக்கப்படும் மூன்றாம்
உலகக் குட்டி நாடுகளுக்கு
ரஷ்யா பொருளா-
தாரரீதியாகப்
பாதுகாப்-பளிக்க
வேண்டி-யது
அதன் தார்மிகக் கடமை என
முழங்கினார்.
தொடர்ந்து
தான்சானியா,
கானா,
காங்கோ
போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும்
பயணம் தொடர்ந்தது.
அமெரிக்க
ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை
சர்வாதி-காரத்தாலும்
ஆப்பிரிக்க மக்கள் அவதிப்படுவதை
நேரடியாக உணர்ந்தார்.
குறிப்பாக
காங்கோவின் அரசியல் சூழல்,
அவரை
மிகவும் பாதித்தது.
மக்கள்
புரட்சிக்கு ஏதாவது செய்தாக
வேண்டும் என்ற எண்ணம்
எழுந்தது.
மூன்று
மாத &
கியூபா
அரசால் அங்கீ-கரிக்கப்படாத
&பயணத்துக்குப்
பிறகு,
'சே'
1965 மார்ச்சில்
கியூபா திரும்பினார்.
விமான
நிலையத்தில் அவரை ஃபிடல்
காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார்.
அதுதான்
வெளியுலகுக்கு 'சே'
நேரடியாக
வெளிப்பட்ட கடைசி நிகழ்வு.
அதன்
பிறகு 'சே'வைக்
காணவில்லை.
எங்கே
போனார் என யாருக்கும்
தெரியவில்லை.
அன்றிரவு
ஒரு சந்திப்பில்,
காஸ்ட்
ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ,
'சே'வை
டிராஸ்கியிஸ்ட் என சுடு
சொல்லால் அழைத்ததாகவும்,
அது
'சே'வின்
மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும்,
அதுதான்
'சே'
கியூபாவை
விட்டு வெளியே செல்லக் காரணம்
என்றும் சொல்லப் படுவதுண்டு.
'சே
எங்கே?'
பத்திரிகைகள்
அலறின.
அனைவரது
பார்வையும் காஸ்ட்ரோ பக்கம்
திரும்பியது.
'சே'வை
சுட்டுக் -கொன்றுவிட்டார்
காஸ்ட்ரோ எனுமளவு கோபம்
கிளம்பியது.
காஸ்ட்ரோவின்
மௌனம் சந்தேகத்தை மேலும்
அதிகப்படுத்தியது.
சே
காஸ்ட்ரோ இருவருக்கு-மிடையே
கருத்து வேறுபாடுகள் நிலவியது
உண்மை.
அடிப்படை-யில்
'சே'
ஒரு
யதார்த்தவாதி.
உள்ளது
உள்ளபடியே போட்டு உடைக்கிற
செயல் புயல்.
காஸ்ட்ரோ
ஒரு ராஜதந்திரி.
அரசியல்பூர்வமாகக்
காய்களை நகர்த்துபவர்.
'யாதும்
ஊரே,
யாவரும்
கேளிர்'
என்பது
'சே'வின்
உலகம்.
ஆனால்,
கியூபாவையும்
அதன் மக்களையும் காப்பாற்ற
வேண்டிய பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு.
இருவருக்கு
மிடையிலான முரண்கள் அனைத்துக்கும்
இந்த வேறுபாடுகளே அடிப்படை!
உண்மையில்
'சே'
அப்போது
காஸ்ட்ரோவுக்கும்,
அவரது
தாய்க்-கும்
ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி-விட்டு
தனது அடுத்த புரட்சிக்காக
காங்கோ கிளம்பி இருந்தார்.
காஸ்ட்ரோ
எவ்வளவோ முயற்சித்தும் 'சே'வை
நிறுத்த முடியவில்லை.
'மக்களுக்கான
பணியில் தனது பாதை தொடர்ந்து
நீளும்.
அதனை
ஒருபோதும் தடுக்கக் கூடாது'
என
'சே'
காஸ்ட்ரோவிடம்
உறுதிமொழி வாங்கியிருந்ததும்
அதற்கு ஒரு காரணம்.
'சே
எங்கே?'
எனக்
கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால்
வெளிப்படையாக பதில் சொல்ல
முடியவில்லை.
காரணம்,
சி.ஐ.ஏ!
'சே'வை
அழித்தொழிக்கத் தேடி வரும்
சி.ஐ.ஏ&வுக்கு
துப்பு கிடைத்து விடக்கூடும்
என காஸ்ட்ரோ அஞ்சியதே காரணம்.
வியட்நாமுக்கு
'சே'
சென்று
விட்டதாக காஸ்ட்ரோ சொன் னதை
நம்பி,
வியட்நாம்
காடுகளில் 'சே'வை
சி.ஐ.ஏ
தேடி அலைந்து ஏமாற்றமும்
எரிச்சலும் அடைந்தது.
அந்தக்
கடுப்பில்,
'சே'வை
காஸ்ட்ரோ சுட்டுக் கொன்றதற்கு
தங்களிடம் ஆதா ரங்கள் இருப்பதாகப்
பொய்ச் செய்தியைப் பரப்பத்
தொடங்கியது.
இது
காஸ்ட்ரோவுக்கு மிகவும்
நெருக்கடியை உருவாக்க,
வேறு
வழி இல்லாமல் அக்டோபர் 3,
1965&ல்,
பொதுமக்கள்
முன்னிலையில் 'சே'
தனக்கு
எழுதிய கடிதத்தை அவரது
அனுமதியுடன் பகிரங்கமாக
வெளியிட்டார் காஸ்ட்ரோ.
கடிதத்தில்
'சே'
கியூபாவை
விட்டு தான் வெளியேறியதற்கான
காரணத்தையும்,
காங்கோ
புரட்சிக்குச் செல்வதையும்
குறிப்பிட்டி ருந்தார்.
'சே',
காங்கோ
காடுகளில் துப்பாக்கியுடன்
களத்தில் இருந்தார்.
கியூபா
வீரர்கள் மற்றும் கறுப்பினப்
போராளிகளுடன் காங்கோவின்
சர்வாதிகார அரசை வேரறுக்கும்
பணியில் இறங்கியிருந்தார்.
ஆனால்
அவர் நினைத்ததுபோல்,
அந்த
புரட்சி 'சே'வுக்கு
வெற்றி தேடித் தரவில்லை.
காங்கோ
நாட்குறிப்புகள் எனும்
டைரியில் எழுதியிருந்தது
போல,
அது
ஒரு தோல்வியின் வரலாறாக
முடிந்தது.
அமெரிக்க
சி.ஐ.ஏ.
கழுகுகள்
அவரைத் தேடி காங்கோ காடுகளுக்குள்
புகுந்தபோது,
'சே'
தன்
பட்டாளத்துடன் செக்கோஸ்
லோவியாவுக்கு இடம்பெயர்ந்
திருந்தார்.
'சே'வுக்கு
மீண்டும் கியூபா செல்ல விருப்பம்
இல்லை.
பொலிவிய
மாவோயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின்
அழைப் பின் பேரில்,
தன்
அடுத்த இலக்கான பொலிவியாவுக்குள்
1966
இறுதிவாக்கில்
மாறுவேடத்தில் நுழைந்தார்.
அவருடன்
50
பேர்
கொண்ட கெரில்லாப் படையும்
புனிதப் பணியில் ஈடுபட்டது.
ஆனால்,
அங்கேயும்
அவருக்கு காங்கோவைப் போல
தோல்வியே காத்திருந்தது.
தட்பவெப்ப
சூழ்நிலைகளின் முரண்,
கலாசாரப்
புரிதலின்மை போன்றவையே அவரது
திட்டங்களின் தோல்விகளுக்குக்
காரணம்.
இன்னொரு
பக்கம் அவர் யார் யாரை தன்
அரசியல் நண்பர்களாக நம்பி
இருந்தாரோ,
அவர்கள்
யாரும் உதவி செய்யாமல்,
மௌனமாகக்
கைகட்டி வேடிக்கை பார்த்ததும்
தோல்விக்கான முக்கியமான
காரணங்களில் ஒன்று.
இந்த
மனவேதனையுடன் ஆஸ்துமாவும்
சேர்ந்து 'சே'வை
வாட்டி வதைத்தது.
போதிய
வீரர்கள் இல்லாதது மற்றும்
உணவின்மை போன்ற பிரச்னைகளுடன்
'சே'
காடுகளில்
அலைந்தார்.
சி.ஐ.ஏ.
பொலிவியாவுக்குள்ளும்
புகுந்தது.
பெலிக்ஸ்
ரோட்ரிக்ஸ் என்பவர்
தலைமையில்வேட்டையாடத்
தொடங்கியது.
1967
அக்டோபர்
8....
தென்
அமெரிக்கச் சரித்திரத்தில்
ஓர் இருண்ட தினம்.
காலை
10.30...
யூரோ
கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன்
'சே'
கடந்து
செல்கிறார்.
வழியில்
தென்பட்ட ஆடு மேய்க்கும்
குண்டுப் பெண்ணின் மேல்
பரிதாபப்பட்டு ஐம்பது
பெஸோக்களைப் பரிசாகத்
தருகிறார்.
நண்பகல்
1.30...
அந்தக்
குண்டுப் பெண் பொலிவிய
ராணுவத்துக்கு 'சே'வின்
இருப்பிடத்தைக் காட்டிக்
கொடுக்கிறாள்.
அலறிப்
புடைத்துப் பறந்து வந்த
பொலிவிய ராணுவம் சுற்றி
வளைத்துச் சரமாரியாகச் சுடத்
தொடங்குகிறது.
பதிலுக்கு
கெரில்லாக்களும் துப்பாக்கியால்
சுடுகின்றனர்.
பிற்பகல்
3.30...
காலில்
குண்டடிபட்ட நிலையில்,
தன்னைச்
சுற்றித் துப்பாக்கியுடன்
சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம்,
''நான்தான்
'சே'.
நான்
இறப்பதைக் காட்டிலும்,
உயிருடன்
பிடிப்பது உங்களுக்குப்
பயனுள்ளதாக இருக்கும்''
என்கிறார்.
மாலை
5.30...
அருகிலிருந்த
லா ஹிகுவேராவுக்கு வீரர்கள்
கைத்தாங்கலாக 'சே'வை
அழைத்து வருகின்றனர்.
அங்கிருக்கும்
பழைய பள்ளிக்கூடம் ஒன்றில்
'சே'
கைகால்கள்
கட்டப்பட்ட நிலையில்
சிறைவைக்கப்படுகிறார்.
இரவு
7.00...
'சே
பிடிபட்டார்'
என
சி.ஐ.ஏ&வுக்குத்
தகவல் பறக்கிறது.
அதே
சமயம்,
'சே'
உயிருடன்
இருக்கும் போதே இறந்துவிட்டதாகப்
பொய்யான தகவல் பொலிவிய
ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
தனக்கு
உணவு வழங்க வந்த பள்ளி
ஆசிரியையிடம்,
''இது
என்ன இடம்?''
என்று
'சே'
கேட்கிறார்.
பள்ளிக்கூடம்
என அந்தப் பெண் கூற,
''பள்ளிக்கூடமா...
ஏன்
இத்தனை அழுக்காக இருக்கிறது?''
என
வருத்தப்படுகிறார்.
சாவின்
விளிம்பிலும் 'சே'வின்
இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து
போகிறார்.
அக்டோபர்
9...
அதிகாலை
6.00...
லா
ஹிகுவேராவின் பள்ளிக்கூட
வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர்
வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது.
அதிலிருந்து
சக்திவாய்ந்த ரேடியோ மற்றும்
கேமராக்களுடன் ஃபெலிக்ஸ்
ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ.
உளவாளி
இறங்குகிறார்.
கசங்கிய
பச்சைக் காகிதம் போல கைகால்கள்
கட்டப்பட்ட நிலையில்,
அழுக்கடைந்த
ஆடைகளுடன் 'சே'வைப்
பார்த்ததும்,
அவருக்கு
அதிர்ச்சி.
அமெரிக்காவுக்குச்
சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு
மாவீரனா இந்தக் கோலத்தில்
இங்கே நாம் காண்பது என அவருக்கு
வியப்பும் திகைப்பும்!
பிடிபட்டிருப்பது
'சே'தான்
என அமெரிக்காவுக்குத் தகவல்
பறக் கிறது.
'சே'வின்
டைரிகள் மற்றும் உடைமைகள்
கைப்பற்றப்படுகின்றன.
தான்
கொண்டுவந்த கேமராவில் 'சே'வை
பல கோணங்களில் புகைப் படங்கள்
எடுக்கிறார் ஃபெலிக்ஸ்.
கைவிடப்பட்ட
ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி
தரும் 'சே'வின்
அப் புகைப்படங்கள் இன்றளவும்
வரலாற்றின் மிச்சங்கள்.
காலை
10.00...
'சே'வை
உயிருடன் வைத்துக்கொண்டு
விசாரணை நடத்தினால்,
அது
உலகம் முழுக்க அவர் மேல்
பரிதாபத்தையும்,
நாயகத்
தன்மையையும் உருவாக்கிவிடும்
என்பதால்,
அவரை
உடனடியாகத் தீர்த்துக்கட்டி
விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ&விடம்
இருந்து தகவல் வருகிறது.
வாலேகிராண்டாவில்
இருந்து வந்த அத்தகவல் 500,
600 எனக்
குறிச்சொற்கள் தாங்கி வருகிறது.
500
என்றால்
'சே'...
600 என்றால்
கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.
காலை
11.00...
'சே'வைச்
சுட்டுக் கொல்வது என
முடிவெடுக்கப்படுகிறது.
யார்
அதைச் செய்வது எனக் கேள்வி
வருகிறது.
'மரியோ
ஜேமி'
என்னும்
பொலிவிய ராணுவ சர்ஜன்
அக்காரியத்துக்காகப்
பணியமர்த்தப்படுகிறார்.
நண்பகல்
1.00...
கைகள்
கட்டப்பட்ட நிலையில்,
'சே'வை
பள்ளிக்கூடத்தின் மற்றொரு
தனியிடத்துக்கு மரியோ அழைத்துச்
செல்கிறார்.
''முட்டி
போட்டு உயிர் வாழ்வதைவிட
நின்று கொண்டே சாவது எவ்வளவோ
மேல்!''
என்பார்
'சே'.
ஆனால்,
மரியோ
அவரை ஒரு கோழையைப் போலக்
கொல்லத் தயாராகிறார்.
தன்னை
நிற்க வைத்துச் சுடுமாறு
'சே'
கேட்க,
அதை
அலட்சியப்படுத்துகிறார்.
''கோழையே,
சுடு!
நீ
சுடுவது 'சே'வை
அல்ல;
ஒரு
சாதாரண மனிதனைத்தான்!''
இதயம்
கிழிக்கும் விழிகள் மின்ன,
உலகம்
புகழும் மனிதன் சொன்ன கடைசி
வாசகம் இதுதான்!
மணி
1.10...
மனித
குல விடுதலைக்காகத் தன்
வாழ்நாளெல்லாம் போராடிய
மாமனிதனை நோக்கி துப்பாக்கி
திறக்கிறது.
ஆறு
தோட்டாக்களில் ஒன்று,
அவரது
இதயத்துக்குள் ஊடுருவியது.
இனம்,
மொழி,
தேசம்
என எல்லைகள் கடந்து பாடுபட்ட
உலகின் ஒரே வீரன் இதோ விடை
பெறுகிறான்.
'சே'
இறந்த
தகவல் உலகத்தை உலுக்கியது.
அக்டோபர்
18....
கியூபா...
ஹவானா-வில்
வரலாறு காணாத கூட்டம் 'சே'வின்
அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின்
தலைமையில் கூடியிருந்தது.
அவர்கள்
முன் தலைமை உரையாற்றுகிறார்
காஸ்ட்ரோ.
''வரலாற்றின்
மகத்தான பக்கங்களில்
இடம்பெற்றுவிட்ட 'சே'
நம்
காலத்தின் ஒப்பற்ற தலைவர்.
கியூபா
மக்கள் அந்த மகத்தான தலைவனை
முன்மாதிரியாகக் கொண்டு
செயல்பட வேண்டும்''
என
வேண்டுகோள் விடுக்கிறார்.
இறந்தபோது
'சே'வுக்கு
வயது 40.
உலகம்
முழுக்க 'சே'வின்
புகழ் இன்னும் இன்னும் பரவியது.
உலகின்
அனைத்து இதழ்களிலும் 'சே'
குறித்துக்
கட்டுரைகள் எழுதப்பட்டன.
உலகின்
பெரும் கவிகளான ஆக்-டோவியா
பாஸ்,
ஹ¨லியா
கொத்சார் போன்றவர்கள் 'சே'
குறித்து
கவிதைகள் எழுதினர்.
பிரெஞ்சு
அறிஞர் ழான் போல் சார்த்தர்,
'பூமியில்
வந்துபோன முழுமையான மாமனிதர்
சே!'
என
மகுடம் சூட்டினார்.
நிகரகுவாவில்
புரட்சி ஏற்பட்டு குவேராயிசம்
எனும் கொள்கைகொண்ட சான்டனி
ஸ்டாஸ் அரசு,
ஆட்சியைக்
கைப்பற்றியது.
அதன்
வெற்றி ஊர்வலத்தின்போது
ஏசுவைப் போன்ற 'சே'வின்
உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும்
தாங்கிப் பிடித்தி ருந்தனர்.
கியூபா
அரசாங்கம் 'சே'வின்
நினைவைத் தொடர்ந்து சமூகத்தின்
ஞாபகத்தில் பதியவைக்கும்
விதமாக தனது கட்டடங்கள்
மற்றும் பூங்காக்களில்
சித்திரங்களாகவும்,
சிலைகளா
கவும்,
பல்வேறு
உருவ வேலைப்பாடு களாகவும்
நிர்மாணித்து பெருமைப்படுத்
தியது.
சான்டா
கிளாரா எனும் நகரில் 'சே'வின்
மியூஸியம் ஒன்றும் உள்ளது.
வருடந்தோறும்
மில்லியன் கணக்கில் பயணிகள்
வெளிநாடுகளிலிருந்து இந்த
மியூஸியத்தைப் பார்ப்பதற்காக
மட்டுமே கியூபாவுக்கு வந்து
செல்கின்றனர்.
கியூபாவில்
இப்போதும் ஒரு வழக்கம் உண்டு.
அதிகாலைகளில்
வகுப்பறைகளுக்குச் செல்லும்
முன்,
அத்தனை
குழந்தைகளும் ஒருமித்த குரலில்
முழங்குகிற வாசகம் என்ன
தெரியுமா?
''ஆம்,
எங்களது
முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக
இருந்தனர்.
நாங்கள்
'சே'வைப்
போல இருப்போம்!''