Monday, 24 September 2012

பசி.........................


பசி ... ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்ப்படும் சக்திக்கான தேடல் / உணர்வு . அந்த உணர்வு உடலுக்கு தேவையான சக்தியை பெறுவதற்காகவும் உடலுடன் உயிர் ஒட்டியிருக்க தேவையான உடல் இயக்க தொழிற்பாட்டின் உந்துதலை தூண்டுவிக்கவும் உடலால் உணர்விக்கப்படும் ஒரு அறிவிப்பு ..

இவ்வாறான உணவு தேடலை உடல் ஆரம்பிக்கும் போது ஒரு மனிதனின் செயல்ப்பாட்டில் பல மாற்றங்கள் .. பிடித்த உணவு , சத்தான உணவு ,ஆடம்பர உணவு வகை , என பல வகைப்படுத்தப்பட்டுள்ள உணவுகளில் ஒரு உணவுக்கான தேர்வு நடக்கிறது . தெரிவு செய்த உணவையே உண்கிறோம் ..

இது பணமுள்ளவனிடம் மட்டும் சாத்தியமாகும் ..

ஆனால் பணமில்லதவர்கள் வாழ்க்கை ??

1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ‘சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை’ ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர்.

இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே’ என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறாக பசி பட்டினியால் அவல சாவை தழுவிக்கொள்ளும் மக்கள் உலகின் ஒரு மூலையில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் ..

இவர்களுக்காக உணவு தேவைகள் பூர்த்தி செய்யப்பட தேவையான அளவு உணவு கையிருப்பு இல்லை என அந்த அந்த நாட்டு அரசாங்கத்தால் கை விரிக்கப்பட்டது ..

பல நாடுகளின் தீவிர முயற்ச்சியால் உலகிற்கான உணவு வழங்கலும் தேவையும் ஓரளவு மட்டும் பூர்த்தி செய்யப்பட்டது ...

இவ்வாறான உணவுக்கான தேடலில் இறந்து போனவர்கள் பல லட்சம் பேர் :'(

அமரிக்காவில் ஒரு பல்கழைக்கழகம் செய்த ஆராட்ச்சியில் முடிவாக உணவுக்கான வழங்கல் போதிய அளவு இருந்தும் பல வளர்ச்சியடைந்த நாடுகளில் உணவுகள் விரயமாக்கப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர் ..

ஆம் .... அது முற்றிலும் உண்மை ...

இன்றும் நம்மில் பலருக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் தெரிந்திருக்கும் . குறிப்பிட்ட உதாரணமாக திருமண வைபவத்தை எடுத்துக்கொள்வோமேயானால் ஒரு திருமண வைபோகத்தில் குறிப்பிட்ட தொகை மக்களுக்கு உணவு தயாரிப்பார்கள் , அப்படி தயாரிக்கப்பட்ட உணவு மக்கள் வருகை குறைவால் அல்லது மித மிஞ்சிய உணவு சமைக்கப்பட்டதன் விளைவாக எஞ்சி இருக்கும் , இறுதியில் வைபோகம் முடியும் தருவாயில் அந்த உணவுகள் குப்பைக்குள் கொட்டப்பட்டுவிடுகிறது ;'(

இதே போல் பல விழாக்கள் , நிகழ்வுகள் , கேளிக்கை களியாட்டங்களில் வீசப்படும் உணவுகளை உலகம் முழுவதும் ஒரு மாதம் கட்டுப்படுத்தினால் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இருபது லட்சம் உயிர்களுக்கு ஒரு வாரகாலம் உணவு வழங்கலாம் என விபரங்கள் வெளியிட்டுள்ளது அமரிக்கவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் .

நண்பர்களே ... !!!!!

சிந்தியுங்கள் ... உங்களின் வீட்டுக்கு அருகில்அல்லது உங்களின் உறவினர்களின் , நண்பர்களின் விழாக்கள் , நிகழ்வுகள் , கேளிக்கை களியாட்டங்களில் வீனாக்கப்படும் உணவுகளை பயனுள்ளவாறு பயன்படுத்தலாமே ????

அதாவது ,

உங்களின் வீட்டுக்கு அருகில்அல்லது உங்களின் உறவினர்களின் , நண்பர்களின் விழாக்கள் , நிகழ்வுகள் , கேளிக்கை களியாட்டங்களில் வீணாக்கப்படும் உணவுகளை அருகில் உள்ள அநாதை ஆச்சிரமங்கள் , முதியோர் இல்லங்கள் , அல்லது ஏழை மக்களுக்கு சென்றடைய கூடியதாக நீங்கள் ஒரு ஏற்பாடு செய்யலாமே ???

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது :-

(1) ஒரு விழா தொடங்கமுதல் அந்த விழா ஏற்பாட்டாளரை தொடர்பு கொண்டு எஞ்சும் உணவுகளை உணவுகளை அருகில் உள்ள அநாதை ஆச்சிரமங்கள் , முதியோர் இல்லங்கள் , அல்லது ஏழை மக்களுக்கு சென்றடைய கூடியதாக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

(2 ) முதலில் விழா ஏற்ப்பாட்டளரை தொடர்பு கொண்டு உங்களின் திட்டம் பற்றிய பூரண விளக்கத்தை கொடுங்கள்

(3) அவரின் ஒப்புதல் பெற்றதின் பின்னர் ஆதரவற்றோர் நிலையங்கள் அல்லது ஏழை மக்களின் புனர்வாழ்வு அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள்

(4 ) நீங்கள் தொடர்பு கொண்ட நிலைய அதிகாரிகளுக்கு விழா நடைபெறும் இடம் , திகதி , நேரம் போன்றவற்றை தெரியப்படுத்துங்கள்

(5) எந்த கல்யாண வீட்டிலும் , வைபோகத்திலும் மக்களின் எண்ணிக்கைக்கு அளவாக மட்டும் உணவுகள் ஆக்கப்படுவதில்லை. எனவே எஞ்சும் என எதிர்பார்க்கப்படும் சாப்பாட்டின் அளவு , பற்றிய எதிர்பார்ப்புகளை நிலைய அதிகாரியிடம் தெரிவியுங்கள்

(6) அவர்களின் உதவியுடன் எஞ்சிய உணவுகளை குப்பைக்கு செல்லவிடாமல் தடுத்து உயிர் வாழ போராடும் மக்களுக்கு உயிர்த்துளியாக உணவுகளை சென்றடைய வழி செய்யுங்கள் :)

# கடவுளும் கல்லானான் நாகரிக உலகில் :(
இன்றைய சூழ்நிலையில் மனிதர்களே மனித இனத்தை காக்கவேண்டும் ...
எங்கள் மனித இனத்துக்கு உயிர்த்துளி வழங்குவோம் :)
முயன்றால் மாற்றலாம் உலகத்தை :)

மாற்றம் ஒன்றே மாற்றம் தரும் :)

என் அன்பான நண்பர்களே ..!!!

உங்களுக்கும் என் கருத்து பிடிச்சிருந்தா உங்க நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

No comments:

Post a Comment